வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

ஒரு கவிஞனின் காதல் (வசன கவிதை) பாகம்- 5 ...

முன் கதை சுருக்கம்: கதிரவன் ஒரு கவிஞன் அவன் தனது நாடிட்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறான். அவன் வரும்வழியில் ராஜகுமாரி செவ்வந்தி யானை மீது உலா  வருகிறாள். செவ்வந்தியை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் கதிரவன். ராஜகிரியின் அரசனாகிய ராஜவர்மன் தன் மகள் செவ்வந்தியை திருமணம் செய்துவைக்க ஒரு போட்டியை அறிவிக்கிறார் அது அறிவு சம்பந்தப்பட்ட போட்டி என்பதால் அதை பிற  ராஜாக்களும், ராஜகுமாரகளும் 
குழப்பம் அடைகின்றனர். அந்த போட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவன் 
 கலந்துகொள்ள தனது தந்தையாகிய கண்ணபிரானிடம் அனுமதி கேட்கிறான். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியேறுகிறார் கண்ணபிரான். போட்டி நாள் வருகிறது அந்த போட்டி மைதானத்தில் செவ்வந்தி எதிர்பாரத விதமாக கதிரவனை பார்த்து மனதை பரிகொடுக்கிறாள்.ராஜா ராஜவர்மர் போட்டியின் விதிமுறையை மாற்றிவிட்டதாகவும் அதன்படி யார்வேண்டுமானாலும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை கேட்டு மற்ற நாட்டு மன்னர்கள் கோபமடைகின்றனர்.
                                                     (இனி...)
.மன்னரின்...
அறிக்கையில்
உடன்பாடற்ற வரம்பன் 
போட்டியை விட்டு 
வெளியேறினான்!

அவன்...
வெளியேறியதற்குக்
காரணம்
கோபம் மட்டுமல்ல
அவனுக்கு தோல்விமேல்
கொண்ட பயமும்தான்,
வரம்பன் வெறும் வாய்ச்சொல்
வீரன்!

மற்ற மன்னர்கள்...
அவரவர் இருக்கையில்
அமர்ந்தனர்
எல்லோருக்கும் முன்பு ஒரு
ஓலை வழங்கப்பட்டது
அதில்
செவ்வந்தி எழுதிய இருவரிக்கவிதை
இடம்பெற்றிருந்தது!

 அனைவரையும்...
பார்த்து ராஜா ராஜவர்மர்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள
ஓலையில் என் மகளாகிய
செவ்வந்தி எழுதிய
இருவரிக்கவிதை உள்ளது
இதை யார் பூர்த்தி செய்து
அதற்குரிய தக்க விளக்கத்தை
அளிகிரார்களோ அவர்களே
வெற்றிபெற்றவர்கலாக அறிவிக்க
படுவார் என்று அறிவித்துவிட்டு
இருக்கையில் அமர்ந்தார்!

எல்லா மன்னர்களுக்கும்...
விழி பிதுங்கியது. இருவரிகளும்
என்னவென்றே புரியாதவர்கள்
எப்படி இருவரியை பூர்த்திசெய்வார்கள்! 

அப்படி...
அந்தக்கவிதை
புரிந்தவர்களுக்கும்
பூர்த்தி செய்யும்
புலமை கிடையாது!

கதிரவனின்...
கண்கள் கலங்கியது
உணர்ச்சி வெப்பத்தில்
இமைகள் இமைக்க
மறுத்தது, காரணம்
முன்தினம் இரவு
அவனுக்கு உதித்த
அதே கவிதையின்
முதல் இருவரிகளை
பார்த்து செவ்வந்திக்கும்
தனக்கும் உள்ள கருத்தொற்றுமையை
நினைத்து நெகில்தபடியே அதை
பூர்த்தி செய்தான்!

பல வில்லேந்திய...
அர்ஜுனர்கள் 
கவி சொல்லேந்தத் தெரியாத 
காரணத்தால்
தோல்வி அடைந்தனர்!

கதிரவன்...
எழுந்தான்
அந்தக் கவிதையில்
பெண்ணியம் ததும்பியது,
காதல் அரும்பியது,
 எடுத்தான் ஓலையை
படிக்கவில்லை கவிதையை
பாடியே விட்டான்!

செவ்வதியும்...
மாடத்தில் இருந்தபடி
சந்தோஷத்தில்  துள்ளினாள்,
அவள் எழுதிய
அந்தக் கவிதையின்
கடைசி இருவரிகள்
வார்தைமாறாமல்
கதிரவன் பாடிக்கொண்டிருப்பதை
கேட்டு வியந்தாள்!

பொதுவாக...
காதலித்த பிறகுதான்
அதைப்பற்றி கவிதை
எழுதுவார்கள் ஆனால்
இங்கோ கவிதை எழுதிய
பிறகுதான்
காதலிக்க ஆரம்பிகிறார்கள்!



மக்கள் கூட்டம்...
ஆர்பரித்தது
ராஜா ராஜவர்மர்
மகிழ்வோடு
கதிரவனை கட்டியணைத்து
பாராட்டினார்
செவ்வந்தி
நாணத்தோடு வந்து
கதிரவன் கழுத்தில்
மாலையிட்டாள்!

மன்னர்கள் விரக்தியோடு...
ஊர் திரும்பினர்,
மக்கள் மகிழ்ச்சியோடு
வீடு திரும்பினர்!

கதிரவன்...
செவ்வந்தி
திருமணம் முடிந்தது
கதிரவன்
செவ்வந்தியின் கணவனானான்!

ஒரு...
கவிஞனின் திறமைக்கு
பரிசாக செவ்வந்தி என்ற
கவிதையே பரிசாக
பெற்றுவிட்டான்!

                    (முற்றும்...)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக